புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக, மரியாதைக்குரிய பெரியவர்களை காவிமயமாக்கும் கலாசாரம் தொடர்ந்து வருகிறது. பாரதியார், திருவள்ளுவர் என இலக்கியப் பெருந்தலைகளை இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கும் விதமாக அவர்கள் காவிமயப்படுத்தப்பட்ட விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக இருந்தது.